கோஷ்டிப் பூசல்: காந்திஜியிடம் காங். தொண்டர்கள் வேண்டுதல்!!
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் நீங்க காந்தியடிகளின் ஆசி கோரி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்புஇளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் விழுந்து வணங்கி வேண்டிக் கொண்டனர்.
எஸ்.ஆர்.பி. விவகாரம் தொடர்பாக வாசன் ஆதரவாளர்களுக்கும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையேகோஷ்டிப் பூசல் உச்சத்தை அடைந்துள்ளது.இரு தரப்பினரும் மாறி மாறி அறிக்கைப் போர்களில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று காலை கடற்கரை மகாத்மா காந்தி சிலைக்கு சென்று அங்கு நூதன போராட்டத்தில் குதித்தனர்.
கட்சிக் கொடியை சிலை முன்பு விரித்து அதில் தங்களது உறுப்பினர் அட்டைகளைப் போட்டு காந்தி சிலை முன்பு விழுந்து வணங்கினர்.
அப்போது, கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் விரைவில் நீங்க ஆசிர்வதிக்க வேண்டும், தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்என்று காந்தியடிகளை அவர்கள் வேண்டிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் உச்சத்தை அடைந்திருப்பது வேதனையைத் தருகிறது. தலைவர்கள்மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவதால் கட்சியின் பெயர் கெட்டுப் போய் விட்டது.
எனவே தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் இன்னும் 36 மணி நேரத்தில் இங்குவந்து காந்தி சிலை முன்பு இனிமேல் கோஷ்டி மோதலில் ஈடுபட மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியை விட்டுவிலகி விடுவோம் என்றனர்.
இளைஞர் காங்கிரஸாரின் இந்த நூதனப் போராட்டத்தால் காந்தி சிலை பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு போலீஸார்குவிக்கப்பட்டனர்.