வீரப்பன் காட்டில் நக்சல்களை தேடி விடிய, விடிய வேட்டை
தர்மபுரி:
வீரப்பன் நடமாட்டம் இருந்த காட்டுப் பகுதிக்குள் ஆந்திர நக்சலைட்டுகள் ஊடுறுவியிருப்பதாகக் கூறப்படுவதையடுத்து அங்கு இரவுபகலாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
எஸ்.பி. ஜெயராம் தலைமையில் 100 அதிரடிப் படையினர் உள்பட 200 போலீஸார் பெண்ணாகரம் காட்டுப் பகுதியில் தேடுதல்வேட்டையில் இறங்கியுள்ளனர்.கர்நாடக எல்லையில் உள்ள மாரண்டஹள்ளி, அரியலூர், பாப்பாரப்பட்டி, பேளூர், ஏமனூர் உள்ளிட்ட பல்வேறு காட்டுப் பகுதிகளில் விடியவிடிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதேபோல கிருஷ்ணகிரி காட்டுப் பகுதி கிராமங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக கோவை மண்டல ஐஜி சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் சேலத்தில் நடந்தது. சேலம்டிஐஜி ஆபாஷ்குமார், சேலம் எஸ்.பி. ஆறுமுகம், தர்மபுரி எஸ்.பி. ஜெயராம், கிருஷ்ணகிரி எஸ்.பி. அசோக் குமார், நாமக்கல் எஸ்.பி.அசோக் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபடவும், இதற்கு அதிரடிப் படையினரைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இதுவரை நக்சலைட்டுகள் ஊடுறுவல் இல்லை என்று கூறி வந்த தமிழக போலீஸார் திடீரென அதிக அளவிலான போலீஸ் படையுடன்காட்டுக்குள் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications