வாசன் ஙண் இளங்கோவன்: ஏட்டிக்குப் போட்டி பச்சை குத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் கட்சியினர் பச்சை குத்துவதைத் தடுக்க முடியாது. அது அவர்களது விருப்பம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்கூறியுள்ளார்.

திராவிடக் கட்சிகளின் பாணியில், தமிழக காங்கிரஸார் சமீப காலமாக பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்திற்குத் தாவியுள்ளனர்.ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்தான் இதை ஆரம்பித்து வைத்தனர்.

வாசனின் பெயரை தங்களது கையில் பச்சை குத்திக் கொள்ள ஆரம்பித்ததைப் பார்த்த இளங்கோவன் ஆதரவாளர்கள் வேறு மாதிரியாககிளம்பினர்.

இளங்கோவனின் ஆதரவாளர்கள் ராகுல்காந்தியின் பெயரை தங்களது கைகளில் பச்சை குத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். பச்சைகுத்துவதிலும் இரு தரப்பினரும் கடும் போட்டா போட்டியில் இறங்க, பிற காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெவித்துவருகின்றனர்.

இந் நிலையில் பச்சை குத்துவது குறித்து வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காங்கிரஸ் தொண்டர்கள், தங்களது கைகளில் தலைவர்கள் பெயரை பச்சை குத்திக் கொள்வதில் தவறில்லை. அது அவர்களது விருப்பம்.அதைத் தடுக்க முடியாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் பச்சை குத்திக் கொள்கிறார்கள். அதில் யாரும் தலையிட முடியாது.

காங்கிரஸ் கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து அவ்வப்போது கட்சி மேலிடத்திற்கு தெரிவித்து வருகிறேன். அது எனதுகடமையும் கூட. அந்தப் பணியில் நான் சரியாக இருக்கிறேன்.

கட்சியில் இளைஞர்களுக்கும் சமமான அளவில் பதவிகள் கொடுக்கப்படுகின்றன. அதேசமயம், மூத்தவர்களை புறக்கணித்து விட முடியாது.அவர்களது வழிகாட்டுதலும் அவசியம்.

கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் இருப்பதாக கூற முடியாது. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சாதாரணவிஷயம்தான். அனைவரும் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார் வாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+