சாலைப் பணியாளர் விவகாரம்: திமுக வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலைப் பணியாளர் பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் பொன்முடி பேசுகையில், கால்நடைகள் மீது முதல்வர் பரிவு காட்டுகிறார். இதைவரவேற்கிறோம். அதேசமயம் 71 சாலைப் பணியாளர்கள், வறுமை, பட்டினியால் இறந்த பின்பும் அவர்கள் மீது முதல்வருக்குகரிசனம் பிறக்காதது ஏன் என்று வினவினார்.அதற்குப் பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக ஆட்சியில் திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்துத்தான் சாலைப் பணியாளர்கள் அந்தப் பதவிகளில் நியமனம் செய்யப்பட்டார்கள் என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக தலைவர் அன்பழகன் எழுந்து, அமைச்சர் கூறிய குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கூறிய கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.
ஆனால், அதை ஏற்க சபாநாயகர் காளிமுத்து மறுத்தார். இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கண்டனம்தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.












Click it and Unblock the Notifications