வாசன் Vs
டெல்லி:
தமிழகத்தில் முற்றி வரும் கோஷ்டிப் பூசலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜி.கே.வாசன், இளங்கோவன்ஆகிய இருவரிடமும் டெல்லியில் இன்று விசாரணை பிளஸ் அறிவுரைக் கூட்டத்தை மேலிடம் கூட்டியுள்ளது.
ஏதாவது ஒரு விவகாரத்தை வைத்து அடிக்கடி கோஷ்டிப் பூசலை சந்தித்து வரும் தமிழக காங்கிரஸ் கட்சியில்சமீபத்தில் எஸ்.ஆர்.பியை வைத்து பிரச்சினை கிளம்பியது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.சட்டசபைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலையில், தேர்தலுக்குத் தயாராவதை விட்டுவிட்டு இப்படி அடித்துக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்று நனைத்த காங்கிரஸ் மேலிடம், இருவரையும்அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.
இதையடுத்து ஜி.கே.வாசன், இளங்கோவன் இருவரையும் டெல்லிக்கு வரவழைத்துள்ளது. இன்று காங்கிரஸ்மேலிடத் தலைவர்களான ஆஸ்கர் பெர்னாண்டஸ், அகிலேஷ் தாஸ் ஆகியோர் இரு தலைவர்களிடம் தனித்தனியாகவும், ஒன்றாக உட்கார வைத்தும் பேசவுள்ளனர்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு இருவரையும் தனித் தனியாக சந்திக்க சோனியா காந்தியும் முடிவு செய்துள்ளதாகதெரிகிறது.












Click it and Unblock the Notifications