திமுக ஆட்சியில் சட்டசபைக்கு ஜெ. வராதது ஏன்?: கருணாநிதி கேள்வி
சென்னை:
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட சட்டசபைக்கே போகாமல் வெளியில் இருந்தபடி ஆட்சியையும், அமைச்சர்களையும், நிதிநிலை அறிக்கைகளையும் விமர்சித்தபடி இருந்துள்ளார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபைக்கு வராமலேயே வெளியில் இருந்தபடி சட்டசபை நிகழ்வுகளையும், ஆட்சியையும் கருணாநிதி விமர்சித்து வருகிறார்என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.மேலும் இது தொடர்பாக கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சனையும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில்,
கடந்த 1972ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு எம்.ஜி.ஆரும், 1989ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை இதேஜெயலலிதாவும் சட்டசபைக்கு வராமல் இருந்துள்ளனர்.
அந்தக் கால கட்டத்தில் திமுக ஆட்சியையும், அமைச்சர்களையும், அரசாணைகளையும், நிதி நிலை அறிக்கைகளையும்எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் மீது திமுக அரசு எந்தவித உரிமைப் பிரச்சினையையும் கொண்டு வரவில்லை. இந்த சரித்திர உண்மைகளைஎடுத்துரைக்க முடியாத அளவுக்கு மாண்பு கொண்ட மனிதர்கள் மாண்டா போய் விடுவார்கள் என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications