பாராசூட்டில் குதித்த இந்திய விமானப் படை தளபதி
ஹின்டான் (உத்தரப் பிரதேசம்):
![]() |
இந்திய விமானப் படையின் 73வது ஆண்டு தினத்தையொட்டி ஹெலிகாப்டரில் 4,000 அடி உயரத்தில் இருந்து பாராட்சூட்டில்குதித்து வரலாறு படைத்தால் விமானப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்.பி. தியாகி.
இந்திய விமானப் படைத் தலைவர் ஒருவர் பாராட்சூட்டில் இருந்து குதிப்பது இதுவே முதல் முறையாகும்.
40 ஆண்டுக்கும் மேலாக போர் விமானியாக உள்ள தியாகி, விமானப் படைத் தலைவரான பின்னரும் அவ்வப்போது பல்வேறுவிமானங்களை இயக்கி வருகிறார். இந் நிலையில் விமானப் படையின் 73வது ஆண்டு தினத்தையொட்டி 73 வீரர்கள் பாராசூட்டில்குதித்தனர்.
இதில் தியாகியும் பங்கேற்றார். எம்.ஐ. ரக ஹெலிகாப்டரில் இருந்து தியாகி 4,000 அடி உயரத்தில் இருந்து குதித்தார். அவரைத்தொடர்ந்து இரண்டு ஆண்டனோவ் ரக விமானத்தில் இருந்து 72 விமானப் படை வீரர்கள் 8,000 அடி உயரத்தில் இருந்துகுதித்தனர். இதில் 3 பேர் பெண் வீரர்கள் ஆவர்.
இந்த நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் ஹின்டான் விமானப் படைத்தளத்தில் நடந்தது.
இந்திய விமானப் படையின் 73 வீரர்கள் ஒரே நேரத்தில் பாராசூட்டில் குதிப்பதும் புதிய தேசிய சாதனையாகும். இதுவரை 32வீரர்கள் குதித்ததே தேசிய சாதனையாக இருந்து வந்தது.
இந்த வயதில் பாராசூட்டில் இருந்து எப்படி குதித்தீர்கள் என தியாகியிடம் நிருபர்கள் கேட்டபோது, இதில் வயதுக்கு என்னவேலை இருக்கிறது என்று பதில் கேள்வி கேட்டார்.













Click it and Unblock the Notifications