For Daily Alerts
Just In
மெரீனாவில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி
சென்னை:
சென்னை மெரீனாவில் குளிக்கச் சென்று 3 வாலிபர்கள் கடலில் மூழ்கி பலியாயினர்.
சென்னை சாலிக்கிராமம் தசரதபுரத்தைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. தையல் கடையில் வேலைபார்த்து வந்தார். இவரும் இவரதுதோழர்கள் மகேஷ்பாபு, ராஜ்குமார் ஆகியோர் மெரீனா கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்து விளையாடிக் கொண்டுஇருந்தனர்.அப்போது திடீரென ஒரு ராட்சத அலை வந்து, 3 பேரையும் இழுத்து சென்றது. 3 பேரும் அலறியபடி நீர்ச் சூழலில் சிக்கிமுழ்கினர். இவர்கள் அண்ணா சமாதி பின்புறம், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குளித்ததால் நீரில் அடித்துசென்றது யாருக்கும் தெரிய வரவில்லை.
இதில் சிட்டிபாபுவின் உடல் மட்டும் கரையில் ஓதுங்கியது. மற்ற 2 பேரின் உடல்களை கடற்கரை போலீசார் தேடிவருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, October 4, 2005, 5:30 [IST]