முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:
இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை இம்பீரியல் ஹோட்டலில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பாமக துணைத் தலைவர் கசாலி தலைமை தாங்கினார். ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், கிடைத்ததை பகிர்ந்து உண்டு, அன்பை வாரி வழங்கும் சமூகமாகவும்,எல்லோரும் சகோதரர்கள் என்று நினைக்கும் சமூகமாகவும் இஸ்லாம் விளங்குகிறது.
இஸ்லாமிய சமூக பொருளாதாரத்தை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். கல்வி, வேலை வாய்ப்பில் இந்த சமூகம்மிகவும் பின் தங்கியிருக்கிறது. இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதைஅவ்வப்போது பாமக ஓங்கி, ஒலித்து வருகிறது.
தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கேட்பது அவர்களது பிறப்புரிமை, வாழ்வுரிமை. மக்கள்தொகைக்கு ஏற்ப தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அடுத்த ஆண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நாங்கள் நடத்தும் போது, இஸ்லாமியர்கள் தனி இட ஒதுக்கீடுபெற்றிருப்பார்கள். அதற்கு நீங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications