For Daily Alerts
Just In
அந்தமான் அருகே புயல் சின்னம்: தமிழகத்தில் மழை நீடிக்கும்
சென்னை:
வங்ககடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் அருகே உருவாகியுள்ள இந்த புயல் சின்னம், தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் தமிழகத்திலும் புதுவையிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமாகும். அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடுமுழுவதும் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Tuesday, October 18, 2005, 5:30 [IST]