For Daily Alerts
Just In
கராத்தேவை அமுக்க திட்டம்: டெல்லியில் தமிழக போலீஸ் படை
சென்னை- டெல்லி:
அவ்வப்போது டெல்லியில் தலையைக் காட்டிவிட்டு சாதுர்யமாகப் பதுங்கி வரும் சென்னை மாநகராட்சியின் துணை மேயர்கராத்தே தியாகராஜனைக் கைது செய்ய உளவுப் பிரிவு போலீசாரைக் கொண்ட தனிப்படை டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத்தெரிகிறது.விரைவில் காங்கிரசில் ஐக்கியமாகவுள்ள கராத்தே சமீபத்தில் அக் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். சன் டிவிதொலைக்காட்சி நிருபருக்கு இண்டியா கேட் பகுதியில் நின்றவாறு பேட்டி தந்தார்.
நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று மூத்த தலைவர் மோதிலால் வோராவை சந்தித்துப் பேசிவிட்டுப்போனார்.
இந் நிலையில் கராத்தேவை டெல்லியிலேயே வைத்து அமுக்க போலீசாருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகத்தெரிகிறது. இதையடுத்து உளவுப் பிரிவினரையும் கொண்ட சிறப்புப் படை அங்கு முகாமிட்டுள்ளது.
இப்போது கராத்தே இந்தப் படையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
Comments
Story first published: Friday, October 21, 2005, 5:30 [IST]