For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி வெள்ளம்: அரசுக்கு வாசன் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து உணவு, அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசு வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 11 மாவட்டங்கள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன. காவிரிக் கரையோரங்களில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.காவிரி வெள்ள அபாயம் நீங்கும் வரை இவர்களுக்கு தொடர்ந்து, உணவு மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றுகோரியுள்ளார் வாசன்.

ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு: கருணாநிதி

கன மழை காரணமாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிவிவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை, வெள்ளம் காரணமாக பெருமளவில் பாதிப்புஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. எனவே இந்தப் பகுதிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.

இப்பகுதிகளில் திமுகவினரும், தோழமைக் கட்சியினரும் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். மழை பாதிப்பு இல்லாதபகுதிகளில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X