மாணவர்களுக்கு ஹெராயின்: இலங்கை பெண் உள்பட 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே வெளிநாட்டு மாணவர்களுக்கு ஹெராயின் விற்றதாக இலங்கையைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை பரங்கிமலைப் பகுதியில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சிலர்ஹெராயின் போதைப் பொருளை விற்று வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து கண்டோண்மென்ட் கல்யாண மண்டபம் அருகே போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுபத்மரஞ்சன் என்பவர் ஹெராயின் போதைப் பொருளுடன் வந்தபோது பிடிபட்டார். அவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
பத்மரஞ்சனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இந்த போதைப் பொருள் விற்பனையில் அவரது மனைவியின்தோழியான ஜெயக்கொடிக்கும் இதில் தொடர்பு இருந்தது தெய வந்தது.
இதையடுத்து ஜெயக்கொடியை அவரது வீட்டிற்குச் சென்று போலீஸார் கைது செய்தனர்.
ஜெயக்கொடியின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி ரூ. 70 லட்சம் மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர். 2 பேரும்கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications