சவாரிக்கு 20 ரூபாய் பலே படகு பிசினஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெள்ளத்தால் மிதக்கும் பகுதிகளில், தெர்மகூல், மரத்தால் ஆன தற்காலிக படகுகளை செய்து அதை வைத்து நல்லகாசு பார்த்து வருகிறார்கள் பலர்.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் இன்னும் கூட வெள்ள நீரில் மிதக்கின்றன. இப்பகுதிகளைச் சேர்ந்தஇளைஞர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காசு பார்த்து வருகிறார்கள்.

உடைந்த மரங்கள், தெர்மகூல் அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி படகுகள் போல தயார் செய்து அவற்றைவைத்து பிழைப்பை மேற்கொண்டுள்ளனர். அதிக அளவில் தண்ணீர் உள்ள பகுதிகளில் இந்த படகு பிசினஸ் கொடிகட்டிப் பறக்கிறது.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்று விட வேண்டுமானால் ரூ. 20 வசூலித்துக் கொண்டுபடகு சவாரியை நடத்துகின்றனர்.

தண்ணீரில் நடக்க சிரமப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோர்தான் இவர்களது முக்கியடார்கெட்.

பாசஞ்சர் மட்டுமல்லாது சரக்கு போக்குவரத்தும் நடக்கிறது. நிவாரணப் பொருட்கள், குடிநீர், பால் பாக்கெட்போன்றவற்றையும் இந்த படகுக்காரர்கள் கொண்டு செல்கிறார்கள். இவை சரக்குகள் என்பதால் கூடுதல்கட்டணத்தையும் கறந்து விடுகிறார்கள்.

பெரம்பூர், புளியந்தோப்பு, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட நீர் சூழ்ந்த பகுதிகளில் இந்த படகுப்போக்குவரத்து படு சூடாக நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+