For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் கவுன்சிலர் சாவு: மதுரை திமுக மேயர் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

Ramachandran Madurai Mayor

மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரி மர்ம சாவு தொடர்பாக தேடப்பட்டு வந்த மதுரை மாநகராட்சிமேயர் செ. ராமச்சந்திரன் திருச்சியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

மதுரை மாநகராட்சியின் 28வது வார்டு பாஜக கவுன்சிலர் பாண்டீஸ்வரி. இவர் சில தினங்களுக்கு முன்புபெருங்குடி அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். அவர் பயணம் செய்த கார் செ. ராமச்சந்திரனுக்குசொந்தமானது என்பதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துக்குப் பின்னர் காரை ஒட்டி வந்த மேயர் செ. ராமச்சந்திரன் தலைமறைவாகி விட்டார்.

அதன் பின்னர் காரை ஓட்டி வந்தது தான் தான் என்று கண்ணன் என்ற டிரைவர் போலீசாரிடம் சரணடைந்தான்.அவனை துருவி துருவி விசாரித்த போது மேயர் கேட்டுக் கொண்டதின் பேரில் நான் சரணடைந்தேன் என்றுபோலீசாரிடம் தெரிவித்தான்.

எனவே போலீசார் மேயர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து டிஐஜி கருணா சாகர் உத்தரவின் பேரில் கூடுத்ல் போலீஸ் சூப்பிரண்டு அமீத் குமார் சிங்தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் மேயர் ராமச்சந்திரனை அவரது வீடு, நண்பர்கள்,உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் வலை வீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவரை திருச்சியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி போலீஸார், அப்பகுதியில் மர்மானமுறையில் நன்றிருந்த காரை சோதனையிட்டபோது அதில் செ. ராமச்சந்திரன் மறைந்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், செ.ராமச்சந்திரனை தேடி வரும் மதுரை திருப்பரங்குன்றம்போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திருப்பரங்குன்றம் போலீஸார் திருச்சி விரைந்து சென்று ராமச்சந்திரனை தங்களது கட்டுப்பாட்டில்எடுத்தனர்.

செ. ராமச்சந்திரனை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அவரிடம் நடத்தப்படவுள்ள விசாரணையின் போது பாண்டீஸ்வரி மரணம் தொடர்பான பல்வேறுகுழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் விபத்தில் இறந்த பெண் கவுன்சிலர் பாண்டீஸ்வரியின் கணவர் ரமேஷ் மேயர் மீது பரபரப்பு புகார்கொடுத்துள்ளார். அதில் என் மனைவி கார் விபத்தில் பலியாகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்என்றும், அதற்குறிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X