குலாம் நபி வீடு அருகே கார் குண்டுவெடித்து 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக குலாம் நபி ஆசாத் இன்று பொறுப்பேற்க உள்ளநிலையில் குலாம் நபி ஆசாத் மற்றும் முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத்ஆகியோரின் வீடுகளுக்கு அருகே கார் குண்டு வெடித்து 10 பேர் பரிதாபமாகபலியானார்கள்.

காஷ்மீர் முதல்வராக குலாம் நபி இன்று மாலை பொறுப்பேற்கவுள்ளார். இந்தநகழ்ச்சி ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. சோனியா காந்தி இதில் கலந்து கொள்கிறார்.இதையொட்டி ஸ்ரீநிகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீநகர் நிவ்காங் சாலைப் பகுதியில் குலாம் நபி ஆசாத், சயீத்ஆகியோரின் வீடுகளுக்கு அருகே இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.காரில் வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் சம்பவஇடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ மொகம்மது தீவிரவாத இயக்கம் இந்த சம்பவத்திற்குப்பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த தீவிரவாதி தான் இந்த வெடிகுண்டுசம்பவத்தை மேற்கொண்டுள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது.

வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தில் அதிக அளவில்ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+