தீவிரவாதிகள் ஊடுறுவல்: பதட்டத்தில் கர்நாடகம்
பெங்களூர்:
பெங்களூரில் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக கர்நாடகமாநில முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பல தீவிரவாதிகள் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகசமீபத்தில் செய்தி வெளியானது.இதையடுத்து பெங்களூர் நகரில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் சந்தேகத்திற்கிடமான16 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்து அவர்களிடம தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பெங்களூரில் தரம்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி, மும்பை ஆகியநகரங்களிலிருந்து ஏராளமான தீவிரவாதிகள் பெங்களூருக்குத் தப்பி வந்து பதுங்கியிருப்பதாக டெல்லி போலீஸார்எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பெங்களூர் நகரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படிஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நபர்களைப் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பெங்களூர் தவிர மங்களூர், மைசூர்உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியப் பகுதிகள் அனைத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் போலீஸார் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் தரம்சிங்.












Click it and Unblock the Notifications