For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் மிதக்கிறது சென்னை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு வார இடைவெளிக்குப் பின்னர்மழை வெள்ளத்தில் சென்னை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது.

பல இடங்களில் வெள்ள நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் இறங்கினர்.

சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே உருவாகியுள்ள குறைந்தகாற்றழுத்த நிலை வலுவடைந்திருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்குக் கன மழை பெய்யும் என வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று மாலை முதல் சென்னை நகரில் கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் பலஇடங்களில் மிக கனத்த மழையும், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழையும் பெய்து வருகிறது.

இதன் காரணமாக நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. பல சாலைகளில் மழை நீர்ஆறு போல ஓடுகிறது. புளியந்தோப்பு, வியாசர்பாடி, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர்முழங்கால் அளவுக்கு ஓடுகிறது.

கடந்த வாரம் பெய்த கன மழையால் தேங்கியுள்ள நீரே இன்னும் சரியாக வடியாத நிலையில் மறுபடியும் கன மழைபெய்யத் தொடங்கியிருப்பதால் சென்னை மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொளத்தூர் பகுதியில் வெள்ள நவாரணம் கோரி பொது மக்கள் இன்று காலை சாலை மறியலில்இறங்கினர்.

செங்குன்றம் அருகே நடந்த இந்த சாலை மறியல் காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரிகள், பேருந்துகள், கார்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சில கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்ட நேரம்காத்துக் கிடந்தன.

போலீஸாரின் சமரச முயற்சிக்குப் பின்னர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர்.

இதே போல புளியந்தோப்பு, மாம்பழச் சாலை, வில்லிவாக்கம் உள்ளிட்ட சில இடங்களிலும் வெள்ள நிவாரணம்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் சில இடங்களில் போலீஸார் லேசான தடியடி நடத்திகூட்டத்தைக் கலைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X