For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி குண்டு வெடிப்பு பின்னணியில் பாக். தீவிரவாதி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லியில் கடந்த 29ம் தேதி 3 இடங்களில் நடந்த தொடர் வெடி குண்டு தாக்குதலின் மூளையாக பாக்கிஸ்தான்தீவிரவாதி செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

லாகர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த அப்துல் கரீம் என்பவன் இந்த சம்பவத்திற்கு திட்டம் போட்டவன் என்றுதகவல் வெளியாகியுள்ளது.

அப்துல் கரீன் கூட்டாளியை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்தபோது அவன் அப்துல் கரீம் தான் குண்டு வெடிப்புக்கு திட்டம் வகுத்தாக ஒத்துக் கொண்டுள்ளான்.

மேலும் அப்துல் கரீம் டெல்லியில் 96-97ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு மற்றும் மும்பை, ஹைதராபாத் நகரில்நடந்த 40 குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல் பட்டுள்ளான் என்பதும் தெரிய வந்துள்ளது.

இவன் வங்காள தேசத்தில் நந்த குண்டு வெடிப்பில் இறந்து விட்டதாக போலீசார் கருதினர். ஆனால் அவன்சாகவில்லை என்று இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

மேலும் அவன் பாகிஸ்தானில் வசிக்கிறான் என்றும் அங்கு வாசனை பொருட்கள் கடை நடத்தி வருகிறான் என்றும்உளவுத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து கொண்டு அப்துல் கரீம் குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்தியுள்ளான். இவனுக்கு 2மகன்கள் உள்ளனர். ஒரு மகன் லாகர்-இ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்துள்ளான் என்றும் தெரிய வந்துள்ளது.

இவன் மற்ற குண்டு வெடிப்புகளை டிட்டெனட்டர் மூலம் நடத்தியுள்ளான். டெல்லி குண்டு வெடிப்பை ரிமோட்மூலம் நடத்தியுள்ளான் என்றும் அப்துல் கரீமின் வலது கரமாக உத்திரபிரதேசத்தை சேர்ந்த அலி அலாஸ்என்பவன் செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X