போக்குவரத்து அதிகாரி வீட்டில் ரூ. 1 கோடி சொத்து பறிதல்
சேலம்:
சேலம் மாவட்ட போக்குவரத்து தீர்ப்பாய செயலாளர் ராமலிங்கத்தின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார்நடத்திய சோதனையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரியாக இருந்தவர் ராமலிங்கம். தற்போது சேலம் மாவட்டபோக்குவரத்து மேல் முறையீட்டு தீர்ப்பாய செயலாளராக இருக்கிறார்.இவருக்கு சேலத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பதாகலஞ்சம் ஊழல் தடுப்புப் போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து ராமலிங்கத்தின் சேலம் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிரடிசோதனை நடத்தினர்.
ராமலிங்கத்தின் முதல் மனைவி கிருஷ்ணவேணி வசிக்கும் உடையப்பபட்டி வீட்டிலும், 2வது மனைவி வசிக்கும்சின்ன திருப்பதி எம்.ஜி.ஆர். நகர் வீட்டிலும் சோதனைகள் நடந்தன.
இந்த வீடுகளிலிருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பான 22 ஆவணங்கள், வங்கி முதலீடுகள்பிடிபட்டன.
ராமலிங்கத்தின் இதர சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications