For Daily Alerts
Just In
சென்னையில் ஏழுமலையான் கோவில்
நகரி:
சென்னையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான இடம் இம்மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டுவிடும் என்று திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி நாரயணசர்மாதமிழக முதல்வர் ஜெயலிலிதாவை நேரில் சந்தித்தார்.அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலை சென்னையில் கட்டுவதற்கு வசதியாக 5 முதல் 10 ஏக்கர் நிலம்ஒதுக்கித் தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக அரசு ஆலோசனைநடத்தியது.
தமிழக வருவாய் துறை அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இடத்தேர்வுக்காக சில இடங்களைபார்வையிட்டு வருகிறார்கள்.
இம்மாத இறுதிக்குள் இடத்தேர்வு முடிந்து தமிழகரசின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கிறோம் என்றுதேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள்.
Story first published: Sunday, November 6, 2005, 5:30 [IST]