மேட்டூர் அணையின் பாதுகாப்பு: அதிகாரிகள் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முழுக் கொள்ளளவான 120 அடி நீர் இருப்புவைக்கப்பட்டிருப்பதால் அணைக்கு பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை அறிய அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வில்ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த் தேக்கத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக 120 அடி நீர்இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 முறை அணை நிரம்பி சாதனை படைத்துள்ளது.தொடர்ந்து அணைக்கு கணிசமான நீர் வரத்து உள்ளது.இந் நிலையில் தொடர்ந்து முழுக் கொள்ளளவுடன் அணை இருப்பதால் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராயதிருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில் பொறியாளர்கள் குழுஇன்று ஆய்வில் இறங்கியது.
அணையின் மேற்கு மற்றும் கிழக்குக் கரை நீர்க் கசிவுப் பகுதிகள், 16 கண் பாலம் ஆகியவற்றில் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணை பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும், இந்த ஆண்டு மட்டும் மேட்டூர்அணைக்கு 318 டிஎம்சி நீர் வந்துள்ளதாகவும் பாண்டியராஜன் பின்னர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications