15ம் தேதி சபரிமலை நடை திறப்பு

Subscribe to Oneindia Tamil

சபரிமலை:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் நடைபெறும் ஆராட்டு விழா ஏப்ரல் மாதத்திற்குமாற்றப்பட்டுள்ளது.

வரும் கார்த்திகை 1ம் தேதி முதல் 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான சபரிமலை நடை திறக்கும் நாட்களைதிருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

மண்டல பூஜை காலத்தில் நடைபெறும் ஆராட்டு திருவிழா ஏப்ரல் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டுக்கான மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது. 16ம் தேதி காலை மண்டலகாலம் தொடங்குகிறது.

அன்று காலை 4.30 மணி முதல் நெய்யபிஷேகம் தொடங்கும். அதன் பிறகு டிசம்பர் 26 இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

இதுவரை மண்டல பூஜை முடிந்து அடுத்து மகர விளக்குக்காக ஜனவரி 1ம் தேதி நடை திறக்கப்பட்டு வந்தது. இதிலும் சிறியமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 30 மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

ஜனவரி 14 அன்று மகரவிளக்கு. தொடர்ந்து ஜனவரி 20 காலை 9 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

பிப்ரவரி: நடைதிறப்பு 12.2.2006 - நடை அடைப்பு 17.2.2006 மாசி மாத பூஜை.

மார்ச்: நடைதிறப்பு 14.3.2006 - நடை அடைப்பு 19.3.2006, பங்குனி மாத பூஜை.

ஏப்ரல் : நடைதிறப்பு 2.4.2006 - நடை அடைப்பு 18.4.2005. இந்த நாட்களில் 10 நாட்கள் ஆராட்டு திருவிழா, பங்குனிஉத்திரம், சித்திரை விஷூ தரிசனம் மற்றும் சித்திரை மாத பூஜை ஆகியவை நடக்கிறது.

திருவிழா கொடியேற்று 2.4.2006, பம்பையில் ஆராட்டு மற்றும் பங்குனி உத்திரம் 11.4.2006, விஷூ தரிசனம் 14.4.2006.

மே: நடை திறப்பு 14.5.2006 - நடை அடைப்பு 19.5.2006 வைகாசி மாத பூஜை.

ஜூன் : இந்த மாதத்தில் இரண்டு முறை நடை திறக்கப்படுகிறது. பிரதிஷ்டை தின பூஜைக்கு நடைதிறப்பு 5.6.2006 - நடைஅடைப்பு 6.6.2006. ஆனி மாத பூஜைக்காக நடை திறப்பு 14.6.2006 - நடை அடைப்பு 19.6.2006.

ஜூலை : நடைதிறப்பு 16.7.2006 - நடை அடைப்பு 21.7.2006, ஆடி மாத பூஜை.

ஆகஸ்ட் : நடைதிறப்பு 16.8.2006 - நடை அடைப்பு 21.8.2006, ஆவணி மாத பூஜை.

செப்டம்பர்: இந்த மாதத்தில் இரண்டு முறை நடை திறக்கப்படுகிறது. திருவோண பூஜைக்காக நடைதிறப்பு 3.9.2006 - நடைஅடைப்பு 7.9.2006. புரட்டாசி மாத பூஜைக்காக நடைதிறப்பு 16.9.2006 - 21.9.2006.

அக்டோபர்: நடைதிறப்பு 17.10.2006 - நடை அடைப்பு 22.10.2006.

இந்த நாட்களில் ஐப்பசி மாத பூஜையுடன் 22ம் தேதி ஸ்ரீ சித்திரை ஆட்டத்திருநாள் பூஜையும் நடைபெறுகிறது.

நடைதிறக்கும் எல்லா நாட்களிலும் மாலை 5.30 மணிக்கு திறக்கும். அடைக்கும் நாட்களில் இரவு 10 மணிக்கு அடைக்கும்.

வரும் மகரவிளக்கு காலத்தில் காலையில் நடைதிறக்கும் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி14 வரை எல்லா நாட்களிலும் அதிகாலையில் நடைதிறப்பது காலை நான்கு மணிக்கு பதிலாக மூன்றுக்கு திறக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+