அல்-உம்மா: போலீஸ் பாதுகாப்புடன் ஆயுள் தண்டனை கைதிக்கு திருமணம்!
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டிணம்:
ஆயுள் தண்டைன பெற்ற அல்-உம்மாவைச் சேர்ந்த கைதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சேக் பாதுஷா (29). அல் உம்மாவைச் சேர்ந்த இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதில்ஆயுள் தண்டனைப் பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவருக்கும் நாகப்பட்டிணம் மாவட்டம் பொறையாறைச் சேர்ந்த கமர்நிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கா ஒரு நாள் திறையில் இருந்து வெளியில் செல்ல இவருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்றுபொறையாறில் பெண் வீட்டில் திருமணம் நடந்தது.
இதற்காக சேக் பாதூ மிக பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகை கொண்டு வரப்பட்டார். மிகுந்தபாதுகாப்புடன் இந்தத் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன் மீண்டும் சேக் பாதுஷா பாளையங்கோட்டை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications