நட்வருக்கு எதிராக சென்னையில் பாஜக போராட்டம்
சென்னை:
மத்திய அமைச்சரவையில் இருந்து நட்வர் சிங்கை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னையில் வெங்கையா நாயுடு தலைமையில்பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஈராக்கின் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் ஊழல் செய்ததாக கூறப்பட்ட புகாரையடுத்து நட்வரை பதவி நீக்கம் செய்ய பாஜக கோரிவருகிறது. நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வருகிறது.இந் நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜத தேசியத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மாஜி அமைச்சர்திருநாவுக்கரசர், தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற தர்ணா போராட்டம் நடந்தது.
இப் போராட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு,
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பாதக் கமிஷன் விசாரணை வெறும் கண்துடைப்பு தான். ஈராக் எண்ணெய் திட்டத்தில்நட்வர் சிங் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் பலனடைந்துள்ளது.
இது ஒரு கிரிமினல் வழக்கு. இதை கமிஷன் விசாரிக்க முடியாது. சிபிஐ போன்ற அமைப்பு தான் இதை முழுமையாக விசாரிக்க முடியும்என்றார்.
முன்னதாக தர்ணாவின்போது பேசிய நாயுடு, காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும் இந்த முறைகேட்டால் லாபம் அடைந்துள்ளதால்நட்வர் சிங்கைக் காப்பாற்ற பிரதமர் முனைகிறார். மத்திய அமைச்சரவையில் ஏகப்பட்ட ஊழல் பேர்வழிகள் இருந்தாலும் அவர்கள் மீதுபிரதமரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.