சிகரெட்டுக்கு தடை: ஷாருக் கானுக்கு அன்புமணி கோரிக்கை
டெல்லி:
சிகரெட்டுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு உதவுமாறு நடிகர் ஷாருக் கானுக்கு மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சமீபத்தில் தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஷாருக், தனது குடும்பத்தினருக்கு பிறந்த நாள் பரிசாக புகைப் பிடிக்கும்பழக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.இந் நிலையில் ஷாருக் கானுக்கு அன்புமணி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
உங்களைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஒரு நடிகர் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவதாக அறிவிப்பது, உங்கள்மீது அன்பு கொண்ட ஏராளமான இளம் ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும்.
அவர்களும் அந்தப் பழக்கத்தைக் கைவிட உங்களது அறிவிப்பு ஒரு காரணமாக அமையும்.
உலகில் தவிர்க்கப்படக் கூடிய ஏராளமான மரணங்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது புகையிழை தான். வருடந்தோறும்தெற்காசியாவில் மட்டும் 40 லட்சம் பேர் புகைப் பிடிக்கும் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள். அதாவது 8 நொடிக்கு ஒருவர் என்ற வீதத்தில்உயிரிழப்பு நேருகிறது.
இந்த அபாயகரமான பழக்கத்தை நம் இளைஞர்கள் கைவிட மத்திய அரசு மேற்கொள்ளும் பிரச்சாரத்துக்கு நீங்களும் துணை நிற்கவேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications