சப்-இன்ஸ்பெக்டர் ரசித்த ரிக்கார்ட் டான்ஸ்!
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
தடை செய்யப்பட்ட ரிக்கார்ட் டான்ஸை சப்புக் கொட்டி ரசித்த சப்-இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சப்பையாபுரம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் கலை நிகழ்ச்சி என்றபெயரில் அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் ஆடும் ரிக்கார்ட் டான்ஸ் நடப்பது வழக்கம்.சேலம் பகுதியில் இது அதிகமாகவே நடந்து வந்ததால், இந்த ரிக்கார்ட் டான்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சப்பையாபுரத்தில் இது போன்ற ஒரு அரைகுடை ஆட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திருக்க வேண்டியசப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, தனது காவல் நிலைய போலீசாருடன் உட்கார்ந்து இந்த டான்ஸை விரும்பிப் பார்த்து நன்றாகவே ரசித்தார்.
அவரது ரசணை குறித்து தகவல் கிடைத்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி கிருஷ்ணபிள்ளை உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications