ஹைதராபாத்தில் ஜெ, சசி: தோட்டத்தில் ஓய்வு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவும் உடன் பிறவா சகோதரி சசிகலாவும் ஓய்வெடுக்க ஹைதராபாத் சென்றுள்ளனர். 5 நாட்கள் அவர்கள்அங்கு தங்கியிருப்பர்.
ஹைதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்துடன் கூடிய மாபெரும் பங்களா உள்ளது.சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது அடிக்கடி அங்கு சென்று வந்த ஜெயலலிதா, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து நக்ஸல்கள்மீதான தடையை நீக்கியதையடுத்து அங்கு செல்வதைத் தவிர்த்தார்.
நக்ஸல்களால் ஆபத்து வரலாம் என்பதால் அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். இப்போது நக்ஸல்கள் மீது ஆந்திர அரசு கடும்நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், சசியுடன் மீண்டும் ஹைதராபாத்துக்கு ஜெயலலிதா சென்றுள்ளார்.
நேற்று பிற்பகலில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்ற ஜெயலலிதா, சசிகலாவுடன் உதவியாளர்களானவெங்கட்ரமணா, ராமலிங்கம் மற்றும் வேலைக்கார சிறுமி சுதா ஆகியோரும் சென்றனர்.
22ம் தேதி வரை ஜெயலலிதாவும் சசிகலாவும் அங்கு தங்கியிருப்பர். ஜெயலலிதாவுக்கு முன்னதாகவே அவரது பாதுகாப்புப் படைகமாண்டோக்கள் ஹைதராபாத் சென்றுவிட்டனர்.