விஜய்காந்துக்கு திருமாவளவன் நோட்டீஸ்
சென்னை:
தமிழ்ப் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகைகள் குஷ்பு, சுகாசினி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்என்று கேட்டு நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்துக்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர் திருமாவளவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில்,
நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகைகள் சுஹாசினி, குஷ்பு ஆகியோர் தமிழ்ப் பெண்கள் கற்பு குறித்து அவதூறாகபேசியுள்ளனர்.
அவர்கள் மீது நடிகர் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும். இல்லை என்றால்சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
சுகாசினியை நடமாட விடக்கூடாது:
இதற்கிடையே டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியை உடைத்து மக்கள் புதிய தமிழகம் என்ற கட்சியைத்தொடங்கியுள்ளார் பு.துரையரசன். இந்தக் கட்சியின் தொடக்கவிழாவுக்கு திருமாவளவன் அழைக்கப்பட்டிருந்தார். அதில் பேசியதிருமா,
தமிழனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்று சுகாசினி பேசியிருக்கிறார் என்றால் அவருக்கு எவ்வளவு ஆணவம் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவரை நடமாட விடக் கூடாது. இப்படிப் பேசுவதால் நான் யாரையும் மிரட்டவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications