கமிஷ்னர் கூட்டும் மாநகராட்சி கூட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் 21ம் தேதியன்று ஆணையர் விஜய்குமார் கூட்டியுள்ள சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.மாநகராட்சியின் 6வது விதியின் கீழ் கமிஷ்னரையே மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. 42வது விதியின்கீழ் இது போன்ற உத்தரவைப் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கூட்டத்தை 28ம் தேதி கூட்டுமாறு கோரி கமிஷ்னருக்கு தலைமறைவு துணை மேயர் கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இதை மீறி 21ம் தேதி கூட்டம் கூட்டினால் அதை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக கராத்தே கூறியுள்ளார்.
இது தொடர்பாக விரைவில் கராத்தேவின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications