மாநகராட்சி கூட்டம்: திமுக கலந்து கொள்ளும்
சென்னை:
நாளை (திங்கட்கிழமை) நடக்கவிருக்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளும் என்று மன்ற எதிர்க்கட்சிதலைவர் மலையன் கூறியுள்ளார்.நேற்று சென்னையில் நடைபெற்ற மன்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு மன்ற எதிர்க்கட்சி தலைவர் மலையன்கூறியதாவது:
நாளை (திங்கட்கிழமை) நடக்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிக்கட்சிகள் கலந்துகொள்வது என முடிவு செய்துள்ளோம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40 சதவீத மக்களுக்கு தான் அரசு வழங்க நிவாரண உதவிகள் கிடைத்துள்ளன. மீதி 60சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை.
இதுபற்றி மன்ற கூட்டத்தில் விவாதிக்க வலியுறுத்துவோம் என்று கூறினார்.
நாளை நடக்கவுள்ள கூட்டத்தில் விஜயராமகிருஷ்ணா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வரி விதிப்பு நிலைக்குழுதலைவராக உள்ளார்.
தலைவர் தேர்வை தொடர்ந்து கராத்தே தியாகராஜனுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இத் தீர்மானம் மூலம் அவர் துணைமேயர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
பின்னர் துணைமேயர் பொறுப்புகளை விஜயராமகிருஷ்ணா ஏற்பார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தெரிகிறது.
மாநகராட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக மேயர், துணைமேயர் இல்லாமல் மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications