For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில் ஸ்னேகம்- மயக்க பிரியாணி- 15 பவுன் நகை அபேஸ்: மர்ம பெண்ணுக்கு வலைவீச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டாக்டரின் மனைவிக்கு மயக்க பிரியாணி கொடுத்து அவரிடம் இருந்து 15 பவுன் நகையைக் கொள்ளையடித்த பெண்ணைபோலீசார் தேடி வருகின்றனர்.

சென்னே அயனாவரத்தைச் சேர்ந்த டாக்டர் கோபிநாத்தின் மனைவி கீதா (59). இவர்களது உறவினர் மீரா பாய். இவர் சிலதினங்களுக்கு முன் மதுரையில் இருந்து ரயிலில் சென்னை வந்தார். அப்போது அதில் பயணம் செய்த ஜெனீபர் என்ற பெண்மீராபாய்க்கு அறிமுகமானார்.

இதையடுத்து சென்னையில் தான் தங்கப் போகும் கோபிநாத்தின் வீட்டு தொலைபேசி எண்ணை ஜெனீபரிடம் தந்தார் மீரா பாய்.

சென்னை வந்து சேர்ந்த மீரா பாய்க்கு இரு நாட்களுக்குப் பின் ஜெனீபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மீராபாய்க்கு வங்கிக் கடன் கிடைக்க உதவி செய்வதாக ஜெனீபர் கூறினார்.

இதையடுத்து ஜெனீபரைப் பார்க்க மீரா பாயும் கீதாவும் சென்றனர். அவர்களை மயிலாப்பூரில் வைத்து சந்தித்த ஜெனீபர்,விருகம்பாக்கம் அருகே ஒரு முகவரியைக் கொடுத்து மீரா பாயை அனுப்பி வைத்தார் ஜெனீபர். அங்கு போய் லோன் தொடர்பாகபேசுமாறு கூறினார்.

கீதாவை அவருடன் போக விடாமல் தடுத்த ஜெனீபர் அவரை எம்ஜிஆர் சமாதி அருகே அவைத்துச் சென்றார். அங்கு கீதாவுக்குபிரியாணி வாங்கி வந்து சாப்பிடச் சொன்னார். அதை உண்ட கீதா மயங்கினார். இதையடுத்து அவர் அணிந்திருந்த 15 பவுன்நகைகளைத் திருடிக் கொண்டு ஜெனீபர் என்ற அந்தப் பெண் மாயமாகிவிட்டார்.

அவரது உண்மையான பெயர் ஜெனீபராக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் கருதுகின்றனர். அந்தப் பெண்ணைப் பிடிக்கதீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளே உஷார்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X