எருமைக்கு அடி, உதை: காவலாளி மீது கேஸ்!!
Subscribe to Oneindia Tamil
பூந்தமல்லி:
தோட்டத்துக்குள் புகுந்த எருமை மாட்டை அடித்து மயக்கமாக்கிய காவலாளி மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.சென்னை குன்றத்தூர்-சோமங்கலம் சாலையில் உள்ள நந்தம்பாக்கம் கிராமத்தில் தனியார் பண்ணை உள்ளது. இதில்காவலாளியாக ஆறுமுகம் (வயது 30) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் திருட்டுத்தனமாய் புகுந்த எருமைமாடுகள் தோட்டத்தை மேய்ந்துநாசப்படுத்தியது. இதனால் கோபமடைந்த ஆறுமுகம், எருமை மாடுகளை அடித்து விரட்டினார்.
அவர் போட்ட போடில் ஒரு மாடு மயங்கி விழுந்தது. எருமையே மயங்கி விழும் அளவுக்குத் தாக்கினார்ஆறுமுகம். இது பற்றி பாலாஜி என்பவர் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஆறுமுகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications