பாண்டிச்சேரியில் பயங்கர மழை
Subscribe to Oneindia Tamil
புதுவை:
புதுவையில் இன்று மிக பலத்த மழை பெய்தது. 24 மணி நேரத்தில் 8.1 செமீ அளவுக்கு மழை கொட்டியது.இந்த பலத்த மழையை தொடர்ந்து புதுவையில் உள்ள அணைத்து ஏரி மற்றும் அணைகளுக்கும் நீர்வரத்து பெருமளவுஅதிகரித்துள்ளது. ஒச்சேரி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.
மேலும் மோசமான வானிலை நிலவுவதாலும், தொடர் மழை நீடிப்பதன் காரணமாகவும் தாழ்வான பகுதிகளை கண்காணிக்கும்பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மழை எச்சரிக்கை கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்மழை புதுவையில் நீடித்தால் அணைத்து அணைகளும் நிரம்பி வெள்ள அபாயம் ஏற்பட வாய்புள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications