விமான நிலையத்தில் தங்கம் பதுக்கி பிடிபட்ட 2 பயணிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் சுங்கச் சோதனை நடந்த பிறகு பெட்டிக்குள் 75 பவுன் நகைகளை வைக்க முயன்ற 2 பயணிகள்பிடிபட்டனர்.
மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நகருக்கு விமானம் செல்ல இருந்தது. இதற்காகபயணிகள் பைகள் வழக்கமான சுங்கத்துறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.சோதனை முடிந்த பிறகு 2 பயணிகள் தங்கள் பெட்டியைத் திறந்து பொட்டலத்தை உள்ளே வைத்தனர். இதை பார்த்த கஸ்டம்ஸ்அதிகாரிகள் அவர்களை பிடித்து மீண்டும் அவர்களின் பையை சோதனை போட்ட போது அதில் 75 பவுன் தங்க நகை இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த 2 பேரையும் விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த 2 பேரிடம்மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கொழும்பு நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 27), ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது(வயது 42) என்பது தெரிய வந்தது.
விமான நிலைய விதிப்படி சோதனை செய்ததற்கு பிறகு அனுமதியின்றி பொருட்களை பெட்டியில் வைக்க கூடாது என்பதால்அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications