குண்டும்,குழியுமான சென்னை நெடுஞ்சாலைகள்
சென்னை:
மதுரவாயல்-கோயம்பேடு சாலை மழையால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் நீண்ட கியூவில்ஊர்ந்து செல்கின்றன.
சென்னையில் உள்ள முக்கியமான சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகும். காஞ்சிபுரம், பெங்களூர், மும்பை, ஹைதராபாத்,ஆகிய பகுதிகளில் இருந்து வரும் லாரி-பஸ் மற்றும் வாகனங்கள் வேலப்பன்சாவடி வழியாக கோயம்பேடு செல்கின்றன. இதேபோல் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்ளில் இருந்து வரும் பஸ்-லாரிகளும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு செல்கின்றன.இதனால் 3 முக்கிய சாலைகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மதுரவாயல், கோயம்பேடு சாலையில் செல்லக்கூடியநிலை உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகளில் உள்ள சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.இருந்தாலும் அதிக அளவில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை உள்ள சாலை பழுதடைந்துள்ளன.
இந்த சாலைகள் எங்கு பார்த்தாலும் மரண பள்ளமாக காட்சி அளிக்கின்றன. மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரைவாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்கின்றன.
இதனால் 5 கீமீ தூரம் வரை உள்ள இந்த சாலையை கடக்க 45 நிமிடம் ஆகிறது. இதனால் இந்த வழியாக அலுவலகங்களுக்குசெல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலையை சீரமைக்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள்.