மதுரை-விருதுநகர் 4 வழிச்சாலை பணிகள் துவங்கியது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்தில்லா வேகத்தை அதிகரிக்கவும் மதுரை - விருதுநகர் இடையே 48.8 கிமீதொலைவுக்கு ரூ.282.58 கோடி மதிப்பில் "4 வழிச்சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு மார்ச்சில் இந்த சாலை போக்குவரத்திற்கு திறக்கப்படுகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை "7ல் மதுரை -விருதுநகர் பகுதி 48.8 கிமீ நீளம் கொண்டது. "தங்க நாற்கர திட்டத்தின் கீழ் இதை நான்கு வழிப்பாதையாக்கும் பணியை தேசியநெடுஞ்சாலை ஆணையம் துவக்கி உள்ளது.

விபத்தில்லா வேகத்தை அதிகரிக்கவும், பயண நேரத்தை குறைக்கவும், நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும்இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக மதுரை சமயநல்லூர் - தோப்பூர் வரையிலும், தோப்பூர் - திருமங்கலம்கரிசல்பட்டி கண்மாய் வரையிலும், கரிசல்பட்டி கண்மாய் -விருதுநகர் வரையிலும் சாலை அமைக்கும் பணி 3 கட்டமாகதுவக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஆந்திராவை சேர்ந்த படேல், கே.என்.ஆர். ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 180 அடிஅகலத்துடன் சமயநல்லூர் வைகையாற்றில் நீளமான மேம்பாலம், 26 சிறிய பாலங்கள், 14 ஸ்லாப் குறும் பாலங்கள், 36 குழாய்குறும்பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், சுற்றுச்சாலை சந்திப்பில் ஒரு பெரிய மேம்பாலம், அனைத்து வசதிகளுடன் கூடியவாகனங்கள் நிறுத்துமிடம் என அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டம் வரும் 2008ம் ஆண்டு மார்சுக்குள் முடிக்கப்பட்டு வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தை அடிப்படையாக கொண்டு இப்பாதை அமைக்கப்படுவதால் விபத்துக்கள் குறையும். வாகனங்கள் பழுதாவதும்வெகுவாக குறையும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+