தமிழகத்தை நோக்கி வரும் இன்னொரு புயல்: நாளை முதல் மீண்டும் மழை கொட்டும்
சென்னை:
அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகததை நெருங்கி வருவதால்நாளை இரவு முதல் மாநிலம் முழுவதும் மீண்டும் கன மழை பெய்ய ஆரம்பிக்கும் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் தமிழகத்தில் இருந்து 800 கிமீ தூரத்தில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து புயல் சின்னமாக மாறியது. இதன் காரணமாக தமிழ்நாடு முழவதும் எப்போதும் இல்லாதஅளவுக்கு பலத்த மழை கொட்டியது. இதையடுத்து அந்த புயல் வலுவிழந்து லட்சத் தீவுகளை தாண்டி போய்விட்டது.
இதனால் தமிழகத்தில் மழை சற்று குறைந்து வெயில் தலைகாட்டியது. இந்த நிலையில் அந்தமான் அருகே மற்றொரு புயல்உருவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை விவரம்:
இன்று காலை 11 மணியளவில் இந்த புயல் சின்னம் தமிழக கடலோரத்தில் இருந்து 1,100 கி.மீ. தொலைவில் மையம்கொண்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே இந்த புயல் சின்னம் உள்ளது. இது வலுவடைந்து வட மேற்கு திசையில்நகர்ந்து வருகிறது.
நாளை இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழக கடலோரத்தை நெருங்கிவிடும். இதனால் நாளை இரவு முதல் தமிழகம்முழுவதும் மீண்டும் மிக கனத்த மழை பெய்யும்.
மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்றுடன் கன மழை பெய்யும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications