For Daily Alerts
Just In
விபச்சாரம்: 2 துணை நடிகைகள் கைது
சென்னை:
சென்னையில் விபச்சார வழக்கில் 2 துணை நடிகைகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், தர்கா தெருவில் உள்ள ஒரு பங்களாவில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து விபச்சார தடுப்பு உதவி போலீஸ் கமிஷனர் பாலுசாமி, இன்ஸ்பெக்டர் மதி ஆகியோர் தலைமையில் போலீஸ்படையினர் அந்த பங்களாவிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயா என்ற ஜெயலட்சமி, கமலா, ஷில்பா, உமா ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்களில் ஜெயலட்சுமி, கமலா இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். தெலுங்குப் பட துணை நடிகைகள். ஜெயலட்சுமி டப்பிங்தொழிலும் செய்து வருகிறார்.
ஷில்பா கேரளத்தைச் சேர்ந்தவர், உமா பண்ருட்டியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்ததுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 பேரும் மைலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, November 29, 2005, 5:30 [IST]