காங். காரிய கமிட்டியில் இருந்து நட்வர் நீக்கம்
டெல்லி:
ஐநாவின் இராக் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் நடந்த முறைகேடுகளில் லாபம் அடைந்ததாகக் கருதப்படும் மத்திய அமைச்சர்நட்வர் சிங், காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தால் ஏற்கனவே வெளியுறவுத்துறையில் இருந்து நீக்கப்பட்டு, துறையில்லாத அமைச்சராக நீடித்து வந்தார்நட்வர்.இந் நிலையில், குரேஷியாவுக்கான இந்தியத் தூதர் அனில் மத்ரேனி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், நட்வரும் அவரதுமகனும் இராக் சென்று எண்ணெய் விற்பனைக்கான டீல் செய்தது குறித்து விளக்கி பேட்டி அளித்தார்.
இதையடுத்து நட்வரை அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை ஏற்க நட்வர் மறுத்துவிட்டார்.
இந் நிலையில், நேற்றிரவு சோனியாவில் இல்லத்தில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் நட்வரை காரியக்கமிட்டியில் இருந்து விலக்க முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூதரிடம் விசாரணை:
இதற்கிடையே நட்வர் மீது குற்றம் சாட்டிய குரேசியாவுக்கான இந்தியத் தூதர் அனில் மத்ரேனி டெல்லிக்குத் திரும்பிஅழைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் வெளியுறவுத்துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இராக் எண்ணெய் ஊழலில்நட்வரின் தொடர்பு குறித்து அமலாக்கப் பிரிவு தான் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.