அபுதாபி வர்த்தக சபை தலைவரான இந்தியர் !
துபாய்:
அபுதாபியின் தொழில் வர்த்தக சபைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த யூசுப் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்தலைவராக இந்தியர் ஒருவர் தேர்வாகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஐக்கிய அரபு நாடுகளின் மிக முக்கியமான இந்த வர்த்தக அமைப்புக்கு முதல் முறையாக நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுஇந்தப் பதவியைப் பிடித்துள்ளார் அலி, எம்கே என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.சுமார் 50,000 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபைக்கு பொதுத் தேர்தல் நடந்தது இது தான் முதன் முறை என்பதால் இத் தேர்தல்பெரிதும் கவனத்தை ஈர்த்தது. இத் தேர்தலில் கனடா, அயர்லாந்து, எகிப்து, லெபனான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியநாடுகளைச் சேர்ந்த 15 தொழிலதிபர்கள் உள்பட 85 போட்டியிட்ட நிலையில் அதிக ஓட்டு வித்தியாத்தில் தலைவராகியுள்ளார்அலி.
இது குறித்து யூசப் அலி கூறுகையில்,
இந்த அமைப்பின் தலைவராக வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு இந்தியன் என்ற வகையில் மிக பெருமையாக உள்ளது.
என்னால் முடிந்த அளவுக்கு இந்திய-ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவேன். மேலும்வணிகம் தொடர்பாக இந்தியர்கள் சந்திக்-கும் பிரச்-சி-னை-க-ளை சுமூகமாக தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்றார்.