For Daily Alerts
Just In
கடல் கொந்தளிப்பு: நீரில் மூழ்கி மீனவர் பலி
கடலூர்:
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம் பகுதியில் ஏற்பட்ட திடீர் கடல் கொந்தளிப்பில் சிக்கி மீனவர் பலியானார். 4 பேர்பத்திரமாக மீட்கப்பட்டனர்.கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்கள் பலவற்றில் இன்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அப்போது தேவனாம்பட்டனம் பகுதியைச் சேர்ந்த பல மீனவர்கள் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையையும் மீறி படகுகளில்கடலுக்குள் சென்றனர்.
இதில் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்த படகு திடீரென கடல் அலைகளில் சிக்கி கவிழ்ந்தது. இதில் ஏழுமலை நீரில்மூழ்கி இறந்தார். மற்ற படகுகளில் வந்தவர்கள், ஏழுமலை படகில் பயணித்த 4 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். ஏழுமலையின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
புயல் சின்னம் காரணமாக கடலில் அலைகள் வழக்கத்தைவிட சீற்றமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, December 8, 2005, 5:30 [IST]