கடல் கொந்தளிப்பு: நீரில் மூழ்கி மீனவர் பலி

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம் பகுதியில் ஏற்பட்ட திடீர் கடல் கொந்தளிப்பில் சிக்கி மீனவர் பலியானார். 4 பேர்பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்கள் பலவற்றில் இன்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அப்போது தேவனாம்பட்டனம் பகுதியைச் சேர்ந்த பல மீனவர்கள் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையையும் மீறி படகுகளில்கடலுக்குள் சென்றனர்.

இதில் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்த படகு திடீரென கடல் அலைகளில் சிக்கி கவிழ்ந்தது. இதில் ஏழுமலை நீரில்மூழ்கி இறந்தார். மற்ற படகுகளில் வந்தவர்கள், ஏழுமலை படகில் பயணித்த 4 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். ஏழுமலையின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

புயல் சின்னம் காரணமாக கடலில் அலைகள் வழக்கத்தைவிட சீற்றமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+