அதிமுகவுடன் கூட்டணியா?: வைகோ பதில்
சென்னை:
வரும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
வைகோவின் பேட்டி விவரம்:கே. அரசியல்வாதிகளுக்கு கற்பு இருக்கிறதா?
ப. உண்மையும், பொய்யும், தீங்கும்-நன்றும் எல்லா துறைகளிலும் இருக்கவே செய்கின்றன. கழனியில் பயிர்களும் உள்ளன.களைகளும் உள்ளன. நிறைபண்புடைய அரசியல்வாதிகள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளனர். ஆனால் களங்கம் மட்டும் தான்கண்ணுக்கு பளிச்சிடும்.
கே. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் மனக்கசப்பு தொடர்கிறதா?
ப. இல்லாத ஒன்று எப்படி தொடர முடியும்.
கே. அரசியல் பணமாக மாறிவிட்டதா?
ப. இன்றைய அரசியலில் பணம் ஆதிக்கம் செய்தாலும் கூட, அதுவே பிரதான சக்தியாக இருக்க முடியாது. எழுத்தும் பேச்சும்உழைப்பும் தியாகமும் உண்மையும் நேர்மையும் தான் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக நிலைத்தே இருக்கும்.
கே. சட்டமன்றத்தில் நீங்கள் பேசப்போவது எப்போது?
ப. தேர்தல் அறிவிப்பு வரட்டும் அப்போது சொல்கிறேன்.
கே. ஆட்சியில் பங்கு தருவதாக சொன்னால் அதிமுக கூட்டணியில் சேருவீர்களா?
ப. கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலேயே பல முக்கிய கட்சிகள் அதிமுகவில் கூட்டணி வைத்த போதும் மதிமுகஅக்கூட்டணியில் சேரவில்லை. இப்போது அந்த கேள்விக்கே இடமில்லை என்றார்.












Click it and Unblock the Notifications