நளினி விடுதலையில் தாமதம்?
வேலூர்:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி விடுதலைக்காககாத்துகிடக்கிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இந்தகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக முருகன் அவரது மனைவி நளினி, சாந்தன் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கும் பூந்தமல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துஉத்தவிட்டது. இவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி ஜனாதிபதிக்கு கருணை மனுஅனுப்பினர்.
அந்த நேரத்தில் நளினி கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.மற்ற 3 பேருக்கும் இது வரை குறைக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நளினியின் 14 ஆண்டு தண்டனைகாலம் முடிந்தது.
இதை தொடர்ந்து அவரை விடுதலை செய்ய பரிந்துரைத்து வேலூர் பெண் சிறை அதிகாரிகள் சென்னையில் உள்ள சிறைஅதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்கள். ஆனால் அந்த கடிதத்திற்கு இதுவரை பதில் வராததால் நளினி விடுதலையாகாமல்உள்ளார். தனது விடுதலைக்காக நளினி காத்துகிடக்கிறார்.
நளினி சிறையில் இருந்தபடியே இந்திரா காந்தி திறந்த வெளிப் பல்கலைகழகத்தில் படித்து வருகிறார். கடைசி செமஸ்டர் தேர்வைஇன்னும் சில மாதங்களில் அவர் எழுத இருப்பதாக சிறை துணையாளர் தெரிவித்தார்.