சைலேந்திர பாபுவுக்கு விருது: மக்கள் கோரிக்கை
சென்னை:
சென்னை நகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க நேரடியாக களத்தில் இறங்கி துரிதமாகச் செயல்பட்ட தென்சென்னை காவல்துறை இணை ஆணையர் சைலேந்திர பாபு, துணை ஆணையர் தாமரைக் கண்ணன், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர்ராஜேந்திரன் ஆகியோருக்கு விருது வழங்க வேண்டும் என்று கோரி சென்னை நகர பொதுமக்கள், தன்னார்வ நிறுவனங்கள் பலகுடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
சென்னை நகரில் கடந்த ஒன்றரை மாதமாக பெய்து வந்த கன மழை மற்றும் ஏரிகள், ஆறுகளிலிருந்து பாய்ந்த வெள்ளத்தால்நகரமே வெள்ளக்காடாகியது. அடையாறு, கூவம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோட்டூர்புரம் பகுதியும், கன மழை மற்றும்ஏரிகள் உடைப்பு காரணமாக வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கின.இந்தப் பகுதிகளில் தென்சென்னை இணை ஆணையர் சைலேந்திரபாபு நேரடியாக களத்தில் இறங்கி மக்களை மீட்கும்நடவடிக்கையை மேற்கொண்டார். உச்சகட்டமாக கோட்டூர்புரத்தில் அவரும் அமைச்சர் ஜெயக்குமாரும் பணியன், டிரவுசருடன்நீரில் நீந்திச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டும், உணவுப் பொருட்களைக் கொடுத்து அசத்தினர்.
போலீஸாருக்கு வெறுமனே உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் தானே களத்தில் இறங்கி மக்களை மீட்ட சைலேந்திரபாபுவின் செயல்கோட்டூர்புரம், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட தென் சென்னைவாசிகளின் பாராட்டைப் பெற்றது.
இவரைப் போலவே, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனும் தண்ணீரில் நீந்திச் சென்றும், சுறுசுறுப்பாக செயல்பட்டு மக்களைபாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றும் அப்பகுதியில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க உதவினார்.
இதேபோல துணை ஆணையர் தாமரைக் கண்ணனும் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டு மக்களது பாராட்டைப் பெற்றார்.இந்த மூன்று அதிகாரிகளின் துணிச்சலான மற்றும் தன்னலம் பாராத செயலைப் பாராட்டும் விதமாக மூவருக்கும் விருதுகள்வழங்கிக் கெளரவிக்க வேண்டும் என்று கோரி தென் சென்னை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் குடியரசுத்தலைவருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications