For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஇ மாணவர்கள் செல்போனுடன் வந்தால் சஸ்பெண்ட்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில், மாணவ, மாணவியர் செல்போனுடன் வந்தால் சஸ்பெண்ட்செய்யப்படுவர். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 238 பொறியியல்கல்லூரிகள் உள்ளன. இங்கு மாணவர்களின் நலன் கருதி செல்போன் கொண்டு வருவதற்கும், அரைகுறை ஆடைகள்அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவுகளை 90 சதவீத கல்லூரிகள் சரியாக அமல்படுத்தி வருகின்றன. சில கல்லூரிகளில் இது சரிவரஅமல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே செல்போன் கொண்டு வருவதற்கும், அரைகுறை ஆடைகளை அணிந்து வருவதற்கும்விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் (புதன்கிழமை) கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும்.

இந்த உத்தரவுகளை மீறுவோர் உடனடியாக கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X