சூயஸ் நிறுவனத்துடன் சேது சமுத்திர ஒப்பந்தம்
சென்னை:
சென்னையில் நடந்த விழாவில், சூயஸ் கால்வாய் நிறுவனம், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்துடன் இன்றுபுதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்றுவதற்காக, சேது கால்வாய் திட்ட கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், சூயஸ்கால்வாய் திட்ட நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று காலை நடந்தது. இதில் சேது சமுத்திரக்கால்வாய் கழக தலைவர் ரகுபதி மற்றும் சூயஸ் கால்வாய் திட்ட நிறுவனத் தலைவர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி வரவில்லை. மாறாக வாழ்த்துச்செய்தியை அனுப்பியிருந்தார். நிகழ்ச்சியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பேசுகையில்,
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பஉதவிகள், கட்டுமானப் பணிகளில் உதவி, பணியாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி ஆகியவற்றை சூயஸ் கால்வாய் நிறுவனம்வழங்கும்.
இதே போன்ற ஒரு ஒப்பந்தம், பனாமா கால்வாய் கழகத்துடனும் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications