நிவாரண நிதி:மத்திய அரசு பரிசீலனை: சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ. 13,686 கோடி கோரியிருப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என்றுமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் சிதம்பரம் கூறியதாவது:
மத்திய அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.1000 கோடியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவதற்காகப்பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய இயற்கை சீற்ற நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய நிதியைஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு முதலில் 500 கோடி அறிவித்தது. பிரதமர் மன்மோகன் சிங்கைதமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்ததை அடுத்து மேலும் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது. இது தவிர ஒரு கோடிலிட்டர் மண்ணெண்ணெய்யும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications