குஷ்பு கார் மீது முட்டை வீசிய 4 பெண்கள் கைது
மேட்டூர்:
நடிகை குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரது கார் மீது முட்டைகளை வீசி போராட்டம் நடத்திய பாமகவினர் 4பேரை போலீஸார் இப்போது கைது செய்துள்ளனர்.
கல்யாணமாகாத பெண்களின் கற்பு நிலை குறித்துப் பேசிய குஷ்புவைத் தண்டிக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில்வழக்குகள் தொடரப்பட்டன.
மேட்டூர் நீதிமன்றத்திலும் குஷ்பு மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் நேரில் ஆஜராகத குஷ்புவுக்கு பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைய குஷ்பு கடந்த நவம்பர் 16ம் தேதி மேட்டூர் வந்தார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் குஷ்புவைக் கண்டித்து செருப்புகள்,விளக்குமாறுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்தபோது குஷ்புவின் கார் மீது முட்டைகள்,செருப்புகள் வீசப்பட்டன.
குஷ்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் உயர்நீதிமன்றம்அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து மேட்டூர் சம்பவம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் மேட்டூர் தாசில்தார் பயஸ் முகம்மதுகான் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், இரு கட்சிகளையும் சேர்ந்த 312 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் 25 பேர் கைதுசெய்யப்பட்டனர். 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீனில் விடுதலையாகினர்.
இந் நிலையில், சேலம் மாவட்ட பாமக மகளிர் அணி செயலாளர் பாக்கியலட்சுமி மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த வைஜெயந்தி,செல்வி, கருப்பாயி ஆகியோரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
நான்கு பேரும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications