பலியானோர் குடும்பத்தை அரசு தத்தெடுக்க திருமாவளவன் யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை அரசே தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றுவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கோரியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு நடத்தவேண்டும். வெள்ள நிலைமை குறித்தும், நிவாரணப் பணிகளை வழங்குவது குறித்தும் அனைத்துக் கட்சிகளுடனும் முதல்வர்விவாதிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். நகர் சம்பவத்தில் இறந்த 42 பேரின் குடும்பங்களையும் அரசே தத்தெடுத்து அவர்களைப் பராமரிக்க வேண்டும்.இறந்து போனவர்களில் பலர் குடும்பத் தலைவர்கள், வீட்டை நடத்திய ஆண் பிள்ளைகள் மற்றும் பெண்கள்.
அவர்களைப் பலி கொடுத்த குடும்பங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்கின்றன. சம்பாதிக்கும் கணவன், பிள்ளைகளைஇழந்துவிட்ட தாய்மார்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திக்கற்று நிற்கின்றனர் என்றுகூறியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications